| Posted By:peer On 4/11/2026 5:09:43 AM |
|
மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"
துரதிர்ஷ்டவசமாக, பலர் உங்களின் குறைகளுக்காக அல்ல, உங்களின் நிறைகளுக்காகவே உங்களை வெறுப்பார்கள். நீங்கள் எதையும் வழங்காதவர்களிடமிருந்து கூட தப்பித்துவிடலாம், ஆனால் நீங்கள் எதை வழங்கினீர்களோ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் ஒரு கையால் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள், மறு கையால் உங்களை முதுகில் குத்துவார்கள். இந்த உலகம் நன்றிகெட்டதனம் நிறைந்தது!
- நீங்கள் யாரைச் சீரமைத்தீர்களோ, அவர்களே உங்களை உடைப்பார்கள்.
- நீங்கள் யாருக்குச் சிகிச்சை அளித்தீர்களோ, அவர்களே உங்களைக் காயப்படுத்துவார்கள்.
- யாருடைய மெழுகுவர்த்திகளை நீங்கள் ஏற்றினீர்களோ, அவர்களே உங்கள் மெழுகுவர்த்தியை அணைப்பார்கள்.
- யாருடைய படகை நீங்கள் தள்ளினீர்களோ, அவர்களே உங்கள் துடுப்புகளை உடைப்பார்கள்.
- யாருடைய கண்ணீரை நீங்கள் துடைத்தீர்களோ, அவர்களே உங்களை அழ வைப்பார்கள்.
- நல்லவராக இருங்கள், ஆனால் இதை மட்டும் மறந்துவிடாதீர்கள்:
"ஒரு பார்வையற்றவன் பார்வை பெற்றவுடன் செய்யும் முதல் காரியம், தனக்கு உதவிய ஊன்றுகோலைத் தூக்கி எறிவதுதான்!"
رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي
தமிழில் : இஸ்மாயில் ஹஸனீ
 |