Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இறைவா! என்னை விட எனக்குப் பிரியமான ஒரு நண்பனை எனக்குத் தா
Posted By:peer On 4/11/2026 6:01:21 AM

ஹுதைபிய்யா போரின் போது, நபி (ஸல்) அவர்கள் ஸலமா பின் அல்-அக்வா (ரலி) அவர்களைக் கண்டார்கள்.

அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை.

எனவே, அவருக்கு ஒரு கேடயத்தை வழங்கினார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து அவரைப் பார்த்தபோது, அவரிடம் அந்தக் கேடயம் இல்லை.


நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "ஸலமாவே! நான் உனக்குக் கொடுத்த கேடயம் எங்கே?"

அதற்கு ஸலமா (ரலி) பதிலளித்தார்: "அல்லாஹ்வின் தூதரே! என் பெரியப்பா ஆமிர் அவர்களைச் சந்தித்தேன், அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை, அதனால் அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்."

இதைக்கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: "நீ முதலில் சொன்னவரைப் போலவே (அதாவது உமது பெரியப்பாவைப் போலவே) இருக்கிறாய்!"

"இறைவா! என்னை விட எனக்குப் பிரியமான ஒரு நண்பனை எனக்குத் தா."

மக்களிடம் காணப்படும் அழகான செயல்களை ஊக்குவியுங்கள், அவற்றைப் பாராட்டுங்கள்.

  • * பெற்றோருக்குப் பணிவிடை செய்பவரிடம் சொல்லுங்கள்: "நீங்கள் ஒரு அற்புதமான மனிதர், உங்களுக்கு நற்கூலி உண்டு."
  • * அன்பான கணவரிடம்/ மனைவியிடம் சொல்லுங்கள்: "நீங்கள் கண்ணியமானவர், உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெகுமதி உண்டு."
  • * நாணயமான ஊழியரிடம் சொல்லுங்கள்: "உங்களால் தான் மக்களிடையே இன்னும் நன்மை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்."
  • * கல்வியில் கடினமாக உழைப்பவரிடமும், வேலையில் வெற்றி பெறுபவரிடமும் சொல்லுங்கள்: "நீங்கள் ஒரு சிறந்த மனிதர்."
  • * உறுதியான (மார்க்கப் பற்றுள்ள) மனிதரிடம் சொல்லுங்கள்: "உன்னுடைய இந்த உறுதி என்னையும் பலப்படுத்துகிறது."

மனிதர்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவர்கள், சில நேரங்களில் அவர்கள் தங்கள் இறக்கைகளில் உள்ள அழகைத் தாங்களே காண்பதில்லை.

மக்களிடம் உள்ள அழகிய பண்புகளைப் பாராட்டுங்கள், ஏனெனில் இது தூய்மையான உள்ளம் கொண்டவர்களின் செயலாகும்!

رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي
தமிழில்: இஸ்மாயில் ஹஸனீ






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..