லிபியா கலவரத்தில் சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்ட மக்கள்!

Posted by Mohamed Uvais (jasmin) on 2/24/2011

லிபியா கலவரத்தில் சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்ட மக்கள்!

http://www.inneram.com/2011022313744/tamil-nadu-workers-in-libya

லிபியா கலவரத்தில் தமிழர் ஒருவர் பலியானார். அங்குச் சிக்கித்தவிக்கும் மேலும் 29 தமிழர்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எகிப்தைத் தொடர்ந்து லிபியா நாட்டிலும், அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கடாபியின் ராணுவத்தினர், புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள்.

வீதியில் இறங்கி போராடும் மக்கள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

ராணுவத்தினரை எதிர்த்து மக்கள் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப் படுகின்றன. அரசு டெலிவிஷன் நிலையங்களும் சூறையாடப்பட்டன.

தலைநகர் திரிபோலி அருகில் உள்ள கொரிய நாட்டு கட்டுமான நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் சூறையாடப்பட்டது. இக் கலவரத்தில் அங்குப் பணிபுரிந்த கொரியா மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்தனர்.

லிபியா கலவரத்தில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2 ஆயிரம் பேர் வரை இறந்து இருப்பார்கள் என்று பென்காஸி நகரத்தைச் சேர்ந்தவர் கூறினார்.

இந்நிலையில், லிபியாவில் நடந்துவரும் கலவரத்தில் தமிழ்நட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியான தகவல் கிடைத்துள்ளது. கொரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா, தலைவன் கோட்டை, ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 30 தொழிலாளர்கள் மின்கோபுரம், காற்றாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நிறுவனம் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அவர்கள் தங்கி இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தக் கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. உடனே தமிழக தொழிலாளர்கள் பதறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினார்கள்.

அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 40) என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய மற்ற 28 பேரும், அருகில் உள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்தனர்.

முருகையா பலியான தகவலை, படுகாயம் அடைந்த அசோக்குமார் டெலிபோன் மூலம் முருகையாவின் மனைவி வெள்ளைத்தாயிடம் தெரிவித்தார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பலியான முருகையாவின் மனைவி வெள்ளைத்தாய், மகன் கோபால கிருஷ்ணன் (14), மற்றும் லிபியாவில் உள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் தலைவன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பலியான முருகையாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த அசோக்குமார் உள்ளிட்ட லிபியாவில் சிக்கித் தவிக்கும் மற்ற தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டர் ஜெயராமனிடம் மனு கொடுத்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் தலைமை செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்





Other News
1. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
2. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
3. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
4. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
5. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
6. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
7. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
8. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
9. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
10. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
11. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
12. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
13. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
14. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
15. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
16. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
17. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
18. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
19. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
20. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
21. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
22. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
23. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
24. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
25. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
26. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
27. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
28. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
29. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
30. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..