பராஅத் இரவு [13-06-2013] - ‎பைத்துஸ்ஸலாம் பள்ளி சிறப்புத் தொழுகை

Posted by Haja Mohideen (Hajas) on 6/10/2014 3:45:07 AM

Nellai Eruvadi Sunnath Jamath

22 mins

பராஅத் இரவு

ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. –

பராஅத் இரவில் உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை செய்து வரும் அமல்கள் (செயல்கள்) வருமாறு:-

1 மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.

2 இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.

3 பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது. அதாவது ‘கழா’ உள்ளவர்கள் கழாத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தஸ்பீஹ் நஃபீல் தொழுகை, திக்று, தஸ்பீஹ் செய்வது, குர்ஆன் ஓதுவது, இஸ்திக்ஃபார் செய்வது, ஸலவாத் ஓதுவது.

4 அன்று பகலில் நோன்பு வைப்பது.
மகத்தான இந்த பராஅத் இரவின் சிறப்பிற்கும் இதில் இப்படி அமல் செய்வதற்கும் நபி மொழி தொகுப்பிலும் நபித்தோழர்கள் வலிமார்கள் வாழ்விலும் நிறைய ஆதாரங்கள் உள்ளது.

“இந்த ஷஃபான் 15 வது இரவில், அல்லாஹ் தனது அடியார்களின் மீது பிரசண்ணாமாகி பாவ மன்னிப்பு கேட்போருக்கு மன்னிப்பும், அருள் வேண்டுவோருக்கு அருளும் வழங்கி சூழ்ச்சிக்காரர்களை தள்ளியும் வைக்கிறான்” (நபிமொழி பைஹகி: 3835).

“எவர் ஐந்து இரவுகளை (இபாதத் செய்து) உயிர்பிப்பாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. 1. துல்ஹஜ் பிறை 8- மினா இரவு 2. அர/பா இரவு 3. ஹஜ்ஜுப்பெருநாள் இரவு 4. நோன்புப் பெருநாள் இரவு 5. பராஅத் இரவு.” (நபி மொழி. ஆதாரம்: அத்தர்கீப்: 1643)

இந்த இரவில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் கூட்டாக அமர்ந்து 3 யாசீன் ஓதுகின்றனர். இது எந்த விதத்திலும் மார்கத்தின் அடிப்படைக்கு முரணானதல்ல.

அண்ணல் நபிகள் நாயகம் (ﷺ) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூறுகிறான்”. பதிவு- முஸ்லிம் 2699. அபூ தாவூத் 1455.

அதிலும் குறிப்பாக யாசீன் சூராவவைப் பற்றி ஹதீஸில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).

இந்த இரவு சம்பந்தமான ஹதீஸ்களில் சில........

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.

ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822

ஒரு நாள் இரவு நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
மிஷ்காத் 1305

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.

இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776

அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1390

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான்.
1. பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.

அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
அஹ்மத் 6642 -

• குறிப்பு; முப்தி தகி உத்மானி அவர்கள் கூறுகிறார்கள்:

• பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.

• பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

• பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து

• இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும். (இஸ்லாஹீ குத்பாத்).

அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீ/பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.

“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)

நபி (ஸல்) காட்டித்தராத அனைத்தும் வழிகேடா?

1. ஆயிஷா [ரலி] அறிவிக்கிறார்கள்:
இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் புதிதாக உருவாக்கினால்
அது நிராகரிக்கப்பட வேண்டும். [ஆதாரம்: புஹாரி]

2 ஜாபிர் [ரலி] அறிவிக்கிரார்கள்:
[மார்க்கத்தில் ஏற்படுத்தப்படும்] ஒவ்வொரு பித்அத் [புதுமையு]ம் வழிகேடாகும். [ஆதாரம்: முஸ்லிம்]

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்று இந்த ஹதீஸ்களை மட்டும் கவனத்தில் கொண்டு கூறுவது ஹதீஸைப் பற்றிய சரியான புரிதல் அல்ல.

மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணான தவறான காரியங்களை இஸ்லாமில் ஏற்படுத்துவதையே நபி [ஸல்] தடை செய்தார்கள் என்பதை வேறு ஹதீஸ்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. மட்டுமல்ல நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதை நன்மை என்றே நபி [ஸல்] கூறியுள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்று இந்த ஹதீஸ்களை மட்டும் கவனத்தில் கொண்டு கூறுவது ஹதீஸைப் பற்றிய சரியான புரிதல் அல்ல.

மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணான தவறான காரியங்களை இஸ்லாமில் ஏற்படுத்துவதையே நபி [ஸல்] தடை செய்தார்கள் என்பதை வேறு ஹதீஸ்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. மட்டுமல்ல நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதை நன்மை என்றே நபி [ஸல்] கூறியுள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்தால் நபி [ஸல்] அவர்களின் காலத்தில் மார்க்க விஷயத்தில் நடைமுறையில் இல்லாத எத்தனையோ வழிமுறைகளை நாம் நம் வாழ்வில் அனுமதித்து நடைமுறைபடுத்தியும் வருகிறோம்.

உதாரணத்திற்கு: மார்க்க விஷயத்தில் வினாடி, வினாக்களை நடத்துவது, ரமலானில் 30 நாட்களும் தொடர்ந்து இரவுத் தொழுகையை அல்லது தராவீஹை மஸ்ஜிதில் வைத்து ஜமாத்தாக தொழுவது, மார்க்க பிரச்சாரம் மற்றும் மக்களின் சேவைக்காக தனித் தனி பெயர்களில் அமைப்புகள், இயக்கங்களை உருவாக்கியிருப்பது இப்படி பல விஷயங்கள், அதை செய்வதற்க்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியான எந்த சான்றும் கிடையாது. இருப்பினும் இவ்வாறு செய்வது மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணல்ல.

முஸ்லிம்களாகிய நாம் நம் சகோதர முஸ்லிம்களை பாவிகள் என்றும் காஃபிர்கள் என்றும் குற்றம் சாட்டுவதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

அபூதர் [ரலி] அறிவிக்கிறார்கள்:
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மற்றொருவரை பாவத்தின் பெயரால், இறைமறுப்பின் பெயரால், அதற்குறியவறாக அவர் இருந்தாலே தவிர குற்றம் சாட்ட வேண்டாம். அதற்குறியவராக அவர் இல்லை என்றால் அது சொன்னவர் மீதே திரும்பிவிடும். [ஆதாரம்: புஹாரி]

பராஅத் இரவில் செய்யப்படும் எந்த அமலும் மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணானதல்ல. விரும்ம்புவோர் அவற்றை செய்யலாம். விருப்பமில்லாதோர் அதை விட்டு விலகலாம். அதைக் குற்றமாக சித்தரிப்பது சரியான அணுகுமுறையல்ல.

‎பராஅத் இரவு 

ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. –

 பராஅத் இரவில் உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை  செய்து வரும் அமல்கள் (செயல்கள்) வருமாறு:-

1 மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.

2 இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.

3 பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது. அதாவது ‘கழா’ உள்ளவர்கள் கழாத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தஸ்பீஹ் நஃபீல் தொழுகை, திக்று, தஸ்பீஹ் செய்வது, குர்ஆன் ஓதுவது, இஸ்திக்ஃபார் செய்வது, ஸலவாத் ஓதுவது.

4 அன்று பகலில் நோன்பு வைப்பது.
மகத்தான இந்த பராஅத் இரவின் சிறப்பிற்கும் இதில் இப்படி அமல் செய்வதற்கும் நபி மொழி தொகுப்பிலும் நபித்தோழர்கள் வலிமார்கள்  வாழ்விலும் நிறைய ஆதாரங்கள் உள்ளது.

“இந்த ஷஃபான் 15 வது இரவில், அல்லாஹ் தனது அடியார்களின் மீது பிரசண்ணாமாகி பாவ மன்னிப்பு கேட்போருக்கு மன்னிப்பும், அருள் வேண்டுவோருக்கு அருளும் வழங்கி சூழ்ச்சிக்காரர்களை தள்ளியும் வைக்கிறான்” (நபிமொழி பைஹகி: 3835).

“எவர் ஐந்து இரவுகளை (இபாதத் செய்து) உயிர்பிப்பாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. 1. துல்ஹஜ் பிறை 8- மினா இரவு 2. அர/பா இரவு 3. ஹஜ்ஜுப்பெருநாள் இரவு 4. நோன்புப் பெருநாள் இரவு 5. பராஅத் இரவு.” (நபி மொழி. ஆதாரம்: அத்தர்கீப்: 1643) 

இந்த இரவில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் கூட்டாக அமர்ந்து 3 யாசீன் ஓதுகின்றனர். இது எந்த விதத்திலும் மார்கத்தின் அடிப்படைக்கு முரணானதல்ல.

அண்ணல் நபிகள் நாயகம் (ﷺ) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூறுகிறான்”. பதிவு- முஸ்லிம் 2699. அபூ தாவூத் 1455.

அதிலும் குறிப்பாக யாசீன் சூராவவைப் பற்றி ஹதீஸில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).

இந்த இரவு சம்பந்தமான ஹதீஸ்களில் சில........

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.

ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822

♣  ஒரு நாள் இரவு நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள். 

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299

♣  பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. 

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
மிஷ்காத் 1305

  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான். 

இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837

  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான். 

முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776

அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1390

 கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான்.
1. பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.

அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
அஹ்மத் 6642 - 

•   குறிப்பு; முப்தி தகி உத்மானி அவர்கள் கூறுகிறார்கள்:

•    பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.

• பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

•     பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து

•       இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும். (இஸ்லாஹீ குத்பாத்).

அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீ/பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.

“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)

நபி (ஸல்) காட்டித்தராத அனைத்தும் வழிகேடா?

1. ஆயிஷா [ரலி] அறிவிக்கிறார்கள்:
இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் புதிதாக உருவாக்கினால்
அது நிராகரிக்கப்பட வேண்டும். [ஆதாரம்: புஹாரி]

2 ஜாபிர் [ரலி] அறிவிக்கிரார்கள்:
[மார்க்கத்தில் ஏற்படுத்தப்படும்] ஒவ்வொரு பித்அத் [புதுமையு]ம் வழிகேடாகும். [ஆதாரம்: முஸ்லிம்]

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்று இந்த ஹதீஸ்களை மட்டும் கவனத்தில் கொண்டு கூறுவது ஹதீஸைப் பற்றிய சரியான புரிதல் அல்ல.

மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணான தவறான காரியங்களை இஸ்லாமில் ஏற்படுத்துவதையே நபி [ஸல்] தடை செய்தார்கள் என்பதை வேறு ஹதீஸ்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. மட்டுமல்ல நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதை நன்மை என்றே நபி [ஸல்] கூறியுள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்று இந்த ஹதீஸ்களை மட்டும் கவனத்தில் கொண்டு கூறுவது ஹதீஸைப் பற்றிய சரியான புரிதல் அல்ல.

மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணான தவறான காரியங்களை இஸ்லாமில் ஏற்படுத்துவதையே நபி [ஸல்] தடை செய்தார்கள் என்பதை வேறு ஹதீஸ்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. மட்டுமல்ல நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதை நன்மை என்றே நபி [ஸல்] கூறியுள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் காலத்தில் அவர்கள் செய்யாத அனைத்தும், அவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் அது தவறு, வழிகேடு என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்தால் நபி [ஸல்] அவர்களின் காலத்தில் மார்க்க விஷயத்தில் நடைமுறையில் இல்லாத எத்தனையோ வழிமுறைகளை நாம் நம் வாழ்வில் அனுமதித்து நடைமுறைபடுத்தியும் வருகிறோம்.

உதாரணத்திற்கு: மார்க்க விஷயத்தில் வினாடி, வினாக்களை நடத்துவது, ரமலானில் 30 நாட்களும் தொடர்ந்து இரவுத் தொழுகையை அல்லது தராவீஹை மஸ்ஜிதில் வைத்து ஜமாத்தாக தொழுவது, மார்க்க பிரச்சாரம் மற்றும் மக்களின் சேவைக்காக தனித் தனி பெயர்களில் அமைப்புகள், இயக்கங்களை உருவாக்கியிருப்பது இப்படி பல விஷயங்கள், அதை செய்வதற்க்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியான எந்த சான்றும் கிடையாது. இருப்பினும் இவ்வாறு செய்வது மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணல்ல.

முஸ்லிம்களாகிய நாம் நம் சகோதர முஸ்லிம்களை பாவிகள் என்றும் காஃபிர்கள் என்றும் குற்றம் சாட்டுவதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

அபூதர் [ரலி] அறிவிக்கிறார்கள்:
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மற்றொருவரை பாவத்தின் பெயரால், இறைமறுப்பின் பெயரால், அதற்குறியவறாக அவர் இருந்தாலே தவிர குற்றம் சாட்ட வேண்டாம். அதற்குறியவராக அவர் இல்லை என்றால் அது சொன்னவர் மீதே திரும்பிவிடும். [ஆதாரம்: புஹாரி]

பராஅத் இரவில் செய்யப்படும் எந்த அமலும் மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணானதல்ல. விரும்ம்புவோர் அவற்றை செய்யலாம். விருப்பமில்லாதோர் அதை விட்டு விலகலாம். அதைக் குற்றமாக சித்தரிப்பது சரியான அணுகுமுறையல்ல.‎

LikeLike ·






Other News
1. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
2. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
3. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
4. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
5. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
6. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
7. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
8. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
9. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
10. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
11. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
12. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
13. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
14. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
15. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
16. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
17. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
18. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
19. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
20. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
21. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
22. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
23. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
24. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
25. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
26. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
28. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
29. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
30. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..