இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம்

Posted by S Peer Mohamed (peer) on 4/23/2019 11:12:19 AM


உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் கடந்த ஞாயிறன்று மூன்று தேவாலயங்கள், நடத்திர விடுதிகள் உள்பட மொத்தம் எட்டு இடங்களில் அடுத்தடுத்து நகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை 290 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படையினர் ஏழு பேர் இலங்கைப் பிரஜைகள் என்று தெரிகிறது. இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் அமைதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள புனித அந்தோணி தேவாலயம், இலங்கையின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான நீர்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு நகரில் புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து கொண்டிருந்த சிறப்பு வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. கொழும்பு நகரிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 27-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்துமகா சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி என்று அழைக்கப்படும் இலங்கை, புராண காலம் தொட்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே தொடர்கிறது என்பது வேதனையளிக்கிறது.

பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்ட மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பாகத்தான் இருக்கும். இப்படியொரு கொடூரமான தாக்குதல் தீவிரமாக சிந்தித்துத்தான் திட்டமிடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மதத் தீவிரவாதிகளாகத்தான் இருக்க முடியும் என்பது, கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து தாக்கியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பயங்கரவாதத் தாக்குதலும் இல்லாமல் இருந்த இலங்கையின் அமைதியைக் குலைப்பதுபோல நடந்தேறியிருக்கும் இந்தத் தொடர் வெடிகுண்டு வெடிப்பு, யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முக்கியமான தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தையும் தற்கொலைப் படையினர் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா 10 நாள்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அதன் பின்னணியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இத்தனைக்குப் பிறகும் துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனும்போது, இதற்குப் பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்பு வலிமையான, அடிப்படை கட்டமைப்புடன் காணப்படுகிறது என்று தெரிகிறது. ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் பின்னணியில், இஸ்லாமிய அல்லது பெளத்த மதத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று காவல் துறை கருதுகிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழு இருப்பதாகப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டாலும், எந்தவொரு மதக் குழுவுடனும் இந்தத் தாக்குதலைத் தொடர்புபடுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை. எந்தவோர் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை.

நியூஸிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கருதுவதும், ஆதாரமற்ற ஊகமாகத்தான் இருக்கும்.

இலங்கையைப் பொருத்தவரை, ஈழத் தமிழர் பிரச்னையேகூட தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையேயான போராட்டம் மட்டுமல்ல. இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே நடந்த போராட்டமாகவும் அதைக் காண வேண்டும். இலங்கையில் தமிழர்களின் வளர்ச்சியை பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்களர்கள், இந்து மத வளர்ச்சியாகப் பார்க்க முற்பட்டனர். அதேபோல, இப்போது அதிகரித்துவரும் கிறிஸ்தவ மதமாற்றம் சிங்களர்களை, குறிப்பாக பெளத்த பிக்குகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் விளைவாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் என்பது புதிதொன்றுமல்ல.

கடந்த 2015 முதல் தற்போது நடந்த தாக்குதல் வரை இதுவரை தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவப் பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் சுமார் 200 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

2014 ஜனவரி மாதம் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2017-லும் அதேபோல வடமேற்கு இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் மதமாற்றம்தான் முக்கியமான காரணம்.

மதமாற்றத்தால் தங்களது சொந்த பூமியில் தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என்கிற அச்சம்தான் சிங்கள-பெளத்தர்களை இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றன.

அதிபர் சிறீசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கு இடையில் இலங்கையில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

இன்னொருபுறம், இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலை எதிர்பார்த்து அதில் அரசியல் ஆதாயம் தேட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச காத்திருக்கிறார். நடந்தேறியிருக்கும் மாபாதகத் தாக்குதலுக்குக் காரணம், மதமாகவும் இருக்கலாம், அரசியலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும்
நன்மை பயப்பதாக இருக்காது!






Other News
1. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
2. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
3. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
4. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
5. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
6. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
7. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
8. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
9. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
10. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
11. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
12. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
13. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
14. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
15. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
16. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
17. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
18. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
19. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
20. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
21. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
22. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
23. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
24. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
25. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
26. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
27. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
28. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
29. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
30. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..