|
Posted by S Peer Mohamed
(peer) on 4/8/2026 6:37:27 PM
|
|||
மார்ச் 29, 2026 மழலைகளின் இனிய கலை நிகழ்ச்சிகளுடன், பஸ்னா முஸ்பீரா தொகுத்து வழங்க, பிலால், கபீர், ரொஹைன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்தனர். இறை வசனத்துடன் மாலை 4:45 மணிக்கு விழா துவங்கியது. முதன்மை விருந்தினராக சேலம் தாருஸ் ஸலாம் கரஸ்பாண்டண்ட் ஹாஜா அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். நெம்ஸ் நிர்வாகிகள் மற்றும் நீட் டிரஸ்ட் நிர்வாகிகளும் மேடையில் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கி, வரவேற்புரையை நமது நட்சத்திரம் பரீரா வழங்கினார். பள்ளியின் முதல்வரும், வாழ்வியல் கல்வியின் வழிகாட்டியுமான மும்தாஜ் அவர்கள் நெம்ஸ் பள்ளி கடந்த காலங்களில் சாதித்த வெற்றிகளையும், எதிர்கால இலக்குகளையும் விரிவாக எடுத்துரைத்தார். அட்மின் மேனேஜர் சேக் ஹாஜா முகைதீன் அவர்கள் பள்ளியின் சிறப்பம்சங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து தெளிவாக விளக்கினார். சிறப்பு விருந்தினர் எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு டிரஸ்டி ஆசிக் அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், நிகழ்ச்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட LED விளக்குடன் கூடிய நினைவுப் பரிசை டிரஸ்டி அகமது பீர் முகைதீன் மற்றும் அட்மின் மேனேஜர் ஹாஜா முகைதீன் அவர்கள் வழங்கினர். எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் குறித்து அறிமுக உரையில், பள்ளி கட்டிட பணிகளில் அவர் செய்த பங்களிப்பு சிறப்பாக குறிப்பிடப்பட்டது. 60,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடத்திற்கான foundation marking பணியை மிகக் குறைந்த செலவில் செய்து, கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பது பாராட்டப்பட்டது. தனது உரையில், எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள், 2018 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியுடன் தனது பயணம் தொடங்கியது என்றும், இது ஒரு தனிநபர் பள்ளி அல்லாது 150க்கும் மேற்பட்டோர் இணைந்து உருவாக்கிய சமூகப் பள்ளி என்பதை உணர்ந்தபோது தான் மிகுந்த ஆச்சரியமடைந்ததாக கூறினார். அரசு அனுமதிகள் முதல் CBSE அங்கீகாரம் வரை கிடைக்க, நிர்வாகிகள் எடுத்த முயற்சிகளையும் அவர் பாராட்டினார். சமூக முன்னேற்றத்திற்காக இயங்கும் இந்த பள்ளி, எதிர்காலத்தில் ஒரு கல்லூரியாக உருவாகும் வரை தன்னுடைய ஆதரவு தொடரும் என உறுதியளித்தார். மேலும், “நான் மேடை பேச்சாளர் அல்ல; இது எனது முதல் மேடை உரை” என பணிவுடன் கூறி தனது உரையை நிறைவு செய்தார். அவரது ஒவ்வொரு கருத்தும், நல்ல எண்ணம் கொண்டோர் இணைந்தால் இறைவனின் அருள் அனைத்துத் துறைகளிலும் கிடைக்கும் என்பதற்கான உண்மையான சான்றாக அமைந்தது. To See the Photos https://www.facebook.com/share/1CEPcFpGGo/ Admissions open for Academic year 2026-27. Our school timing is 9:00 AM to 3:45PM 📸 Instagram: nemsschool
#NEMS #CBSE #AnnualDay #Eruvadi #Education #Community #Success #Inspiration #nellaieruvadi |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||