Posted by S Peer Mohamed
(peer) on 1/21/2025 5:18:51 PM
|
|||
இத்தனை இழப்புகளின் பின்னர் காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? உண்மையில் அது வெற்றியா? தோல்வியா? என்பதைத் தீர்மானிக்கும் அருகதை காஸா மக்களுக்கு மாத்திரமே உள்ளது. இந்தப் போராட்டத்தில் தமது குடும்ப அங்கத்தவர்களுள் ஒருவரையாவது இழக்காத எந்த ஒரு குடும்பமும் இல்லை என்ற அளவுக்கு மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை எல்லோரும் எல்லாவற்றையும் இழந்து பெற்ற அடைவு இது. தற்போது காஸா மக்கள் தாம் பெற்றது வெற்றியா? தோல்வியா? என்பதை உலகுக்குக் காண்பித்துக்கொண்டிருக்கின்றனர். காஸா முழுவதிலுமிருந்தும் வருகின்ற காட்சிகளே இஸ்ரேல் நெஞ்சு வெடித்துச் சாகப் போதுமானது. கடந்த வாரம் ஓர் இஸ்ரேல் ஊடகம் பின்வருமாறு தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தது "எல்லா அரபு நாடுகளையும் ஆக்கிரமிக்கலாம், ஆனால் காஸாவை ஆக்கிரமிக்க முடியாது" |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |